வெள்ளி, 12 டிசம்பர், 2008

கவிதை வானில் காதல் தூறல்கள்

கவிதை மலைச்சாரலில்,
அனிச்சை பூக்களை
தொலைவில் வைத்து ரசிப்போம்
நாம் ரசிப்பது தெரிந்தால்
அது உடனே வாடிவிடும் என்பதால்.

**********************************

பூவுக்குள் முள்
என்னவள் இதயத்தில்
என் எதிரி

**********************************

யாரவன் என்னவள் வீட்டுக்கருகில்
கட்டி வைத்திருந்த நிலவை
வானில் வீசியவன்?

**********************************

பிழைத்து போகட்டும்
என்று பர்வைகணையை திருப்பி விடாதே
சுகமான சாவு மிக பிடித்து இருக்கிறது

**********************************

காதல் கனவுகள்,
மறக்க செய்கின்றன
என் வயிற்று பசியை

**********************************

காதல் வேண்டும், காத்திருத்தல் வேண்டும்,
என்னவள் என் மீது, எனக்காக,
என் கல்லறையிலாவது

**********************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக