சனி, 13 டிசம்பர், 2008

பனித்துளியை தாங்கும் என் ரோஜா


பனித்துளியை இலையில் தாங்கும் புல் போ
தண்ணீர் குடத்தை இடையில் தாங்கி வருகிறாய்.

கால்களின்
விலங்குபோல வெள்ளி கொலுசு
ஆணவமாக சத்தமிட்டு உலக அமைதியை கலைக்கின்றன.

நானும்
நீயும் நேருக்கு நேராக நீயும் நானும் நோக்குகையில் நான் உன் கண்ணையும் நீ என் கண்ணையும் பார்வையால் தாக்க ஆரம்பிக்கிறோம்

நீ
ஒரு வழியில் விலக, அனிச்சை யாய்என் பாதங்களும்
அதே
பாதையை தேர்ந்தெடுக்க

உடனே
மறு வழியில் உன் பாதம் பதிக்க,
நானும்
வேண்டுமென்றே என் கால்களை அதே வழியில் செலுத்த,

இக்கட்டு
உருவாக்க மவுனம் வழிய ஆரம்பிக்கிறது, நீயும் நானும் வேறு வழியின்றி மாற்று வழி தேர்ந்தெடுக்க

நீ
பாதையில் நடக்க ஆரம்பிக்க, என் நெஞ்சில் பூ பூக்க ஆரம்பிக்கிறது
சபிக்க ஆரம்பிக்கிறது உன் காலடி படாத மண் துகள்கள்.

மறு
படியும் வெற்று குடத்துடன் திரும்பி வருகிறாய்,
என்
பார்வை மறுபடியும் உன் கண் மேய,

நீயோ
என் உணர்வு தூண்ட , மண் பார்த்து நடக்கிறாய்,
நான்
உன் கால்விரல் தூசியை சபிக்கிறேன் என்னவளை அழுக்கக்கதே என,

ஒற்றை ரோஜா உன்னால் சூடப்படும் போது,
உலக
மலர்களெல்லாம் தான் மனஸ்தாபப்படும்.

அருகில்
வந்து என்னை பார்த்து முத்துக்களை சிரிப்புகளால் உதிர்க்கிறாய், இதற்க்காக எத்தனை தடவை வேண்டுமானால், கோமாளியாக மாறத்தயார்.

உன் சிரிப்புக்கு காரணம் நான் யோசித்து கொண்டு இருக்கின்றேன், பின்னால் வந்த உன்தந்தை என் கனவுலகை உடைத்து, என்னை உடைக்க வருவதை அறியாமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக