வெள்ளி, 12 டிசம்பர், 2008

நித்தியமானவள்


உன்னிடம் சரணடிய வைத்து விட்டாய்,
இப்போது உன்னை விரும்புகின்றேன்.
நீயோ எப்போதும் என்னை விரும்பிக்கொண்டிருக்கிறாய்

வா வந்து விடு இரு வரும் தழுவிக்கொள்ளலம்,
யார் பார்த்தல் நமக்கென்ன?
கூச்சத்தை விட்டு விட்டேன்.

யார் என்னை சுற்றி இருப்போர்?
நான் இவர்களை நாடிய போது உதாசினபடுதியவர்கள் தானே இவர்கள்,
உன்னை நான் விரும்புவதை தடுக்க வந்த உறவினர்கள்.

என்னவள் கூட என்னை தீண்ட விரும்ப வில்லை - ஆனால்
நீ என்னை எப்போதும் அணைக்க துடித்துக்கொண்டு இருக்கின்றாய் .

யார் தடுத்தாலும் நான் உன்னை சேர்வதை தடுக்க இயலாது.
வரட்டும் நெஞ்சில் உறுதியுடன் தான் இருக்கின்றேன்.
நான் உன்னை இப்போது வெறுக்க வில்லை.

நான் காதலித்த பெண் கூட என்னை எப்போதுமே விரும்பியதில்லை
நீயோ எப்போது வந்தாலும், ஏற்று கொள்ள தயாராய் இருக்கிறாய்,

யாரவது உன்னை தடுத்தால்,
அவர்களை தண்டிக்க தயாராகத்தான் இருக்கிறேன்
வா சீக்கிரம், உன்னுடன் ஐக்கியமாகிறேன்,


உலகில் அதிகம் வெறுக்கப்படுவவள் நீதான் என்றாலும்
உன்னவர்களை அடைந்து விடுகிறாய் உன் காத்திருப்பால்.

யப்பா என்ன ஒரு மென்மை, என்ன வாசம்?
உன்னை போ யாருமே இவ்வளவு அழகை தழுவியது இல்லை
பூவாசம் நாசியை அடைக்கிறது

ஐயோ மகனே போயிட்டயே என் யார் யாரோ கத்திக்கொண்டு இருக்க
இந்த "என் உடல்" எனப்பட்ட வஸ்து அமைதியாய்
கல்லறைக்கு சென்று கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக